சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூறும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்வுகளுடன் சட்ட வார விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

முதலாவதாக அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சி மொழி தொடர்பான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணியை தொடங்கினர். இந்த பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் கொடி அசைத்து துவங்கி வைத்தார். இதனையடுத்து பொய்க்கால் குதிரை, கரகாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ஆகியவைகளுடன் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.