கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அம்சிகாகுழி பகுதியில் வினு(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் இருக்கும் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வினு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினுவின் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் வினுவின் தங்கை குடும்பத்தினர் அவருக்கு உணவு கொடுத்து வந்தனர். மேலும் திருமணம் செய்வதற்காக பல இடங்களில் வினுவுக்கு பெண் பார்த்து வந்தனர்.

ஆனால் சரியான வரன் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வினுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.