கோயம்புத்தூர் மாவட்டம் உள்ள கோவில் மேடு நல்லம்மாள் வீதியில் மிதிலேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் ராம் என்பவரிடம் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் மிதிலேஷுக்கு கொடுக்க வேண்டிய 40 ஆயிரம் ரூபாய் சம்பள பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற அன்று ராம் தனது நண்பர்களுடன் இணைந்து மிதிலேஷின் வீட்டிற்கு சென்ற அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதுகுறித்து மிதிலேஷ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.