கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 11-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் சிறுமிக்கும் உறவினரான டிரைவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் அழைத்து கண்டித்தனர்.

கடந்த 15-ஆம் தேதி டிரைவர் சிறுமியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் சிறுவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.