திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை அருகே அணைக்கரையில் இருக்கும் தனக்கு தோட்டத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் உரிமம் பெற்று என்பவர் வானவெடி தயாரிக்கும் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். நேற்று மாலை உடன்குடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிகள் வெடித்து சிதறியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜ்குமார் உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானதால் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி பாலா என்பவரும் காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பாலாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.