வரும் 11ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில வாழ்வாதார இயக்கம் சார்பாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 8:00 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது.

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடையவர்கள் பங்கு பெறலாம். முகாமிற்கு வரும் பொழுது கல்வி தகுதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார், சுய விவர குறிப்பு ஆகிய நகல்களை கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.