சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து இன்று காலை 5 மணி முதல் பணிமனைகள் முன்பு, பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு பஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் சென்னை முழுவதும் இன்று காலையில் பேருந்துகள் இயங்காது. கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் இந்த ஆண்டு 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.