தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ள நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் பிப்.. 16 – மார்ச் 6 வரையிலும் புத்தக கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்.. 16 ஆம் தேதி தொடங்கிய கண்காட்சியானது இன்றோடு முடிவடைகிறது.