கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயன் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை நீண்ட நேரம் ஆகியும் விஜயன் எழுந்திருக்கவில்லை.

இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது விஜயன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.