கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அந்திவாடி பகுதியில் ராம் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார் இவர் ஓசூர் தளி சாலையில் இருக்கும் கிராண்ட் சினிமாஸ் தியேட்டரில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று சினிமா தியேட்டர் முன்பு மூன்று பேர் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்n இதனை ராம் பிரசாத் தட்டி கேட்டார். இதில் கோபமடைந்த மூன்று பேரும் ராம் பிரசாத்தை கட்டையாலும், கைகளாலும் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராம் பிரசாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராம் பிரசாத்தை தாக்கிய வேனு, பிரேம்குமார், அசோக்குமார் ஆகிய 3 பெரையும்பகைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.