கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கே. மோட்டூர் பகுதியில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் லோகேஸ்வரி ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரி தேர்வில் லோகேஸ்வரி குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் பெற்றோர் லோகேஸ்வரியை கண்டித்தனர். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்து லோகேஸ்வரி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.