தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க கூலி தொழிலாளி ஒருவர் அரசு மருத்துவமனை அருகே இருக்கும் மின் கம்பம் மீது ஏறினார். அவர் மின் கம்பிகளை தொடர் முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் அந்த வழியாக சென்ற ஒருவர் தொழிலாளியை கீழே இறங்க சொல்லி சத்தம் போட்டுள்ளார்.

அதன் பிறகு பொதுமக்கள் சிலரும் கூச்சலிட்டதால் அந்த நபர் மின்கம்பத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கி வந்து விட்டார். அவர் எதற்காக மின்கம்பம் மீது ஏறினார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.