கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணி மலையில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் சரவணன், அவரது மனைவி செல்வி ஆகியோர் பெரம்பலூரைச் சேர்ந்த மணி, சந்திரசேகரன் ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து 16 லட்சத்து 80 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைகளின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்தபோது அது போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து நிதி நிறுவன மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போலியான தங்க நகையை வைத்து மோசடி செய்த 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான செல்வியை தேடி வருகின்றனர்.