கோடநாடு கொலை- கொள்ளை  வழக்கில் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது.

கொடநாடு  கொலை மற்றும் கொள்ளை வழக்கு சம்பந்தமாக இன்று நடைபெற்ற விசாரணைகள் சிபிசிஐடி போலீஸ் சார்பில் நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே நாங்கள் 167 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும்,  மேலும் செல்போன் டவர் மற்றும் இதர விவரங்கள்  நீதிமன்றங்கள் மூலமாக நாங்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் எங்களுக்கு மேலும் அவகாசம் தேவை கூறினர்.

மேலும் பலரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக நாங்கள் தயாராக இருப்பதாகவும்,  அதற்கு உண்டான பணிகள் நடந்துருவதால் கூடுதல் அவகாசம் கேட்டு நான்கு பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையானது வருகின்ற அக்டோபர் மாதம் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.