பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் சாக்லேட் ஒன்றுதான் டைரி மில்க். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இதனை  சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் டைரி மில்க் சாக்லேட்டில் உயிரோடு புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் சேர்ந்த ராபின் சாக்கியஸ் என்பவர் 45 ரூபாய் கொடுத்து டைரி மில்க் சாக்லேட் வாங்கி உள்ளார். அதை பிரித்து வாயில் வைக்க போனவருக்கு அதிர்ச்சி காத்திந்துள்ளது. அந்த டைரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் புழு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் புழு ஊர்ந்து செல்லும் வீடியோவை தன்னுடைய X தளத்தில் பதிவிட்டுள்ளார்.  இதனையடுத்து இதற்கு பதிலளித்த Dairymilk நிறுவனம், “வணக்கம், Mondelez India Foods Private Limited (முன்னாள் Cadbury India Ltd) மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க முயற்சிக்கிறது. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து வருந்துகிறோம்.  உங்கள் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நன்றி!” என பதிவிட்டுள்ளது.