ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வரமாட்டார். ஆனாலும் இவிகேஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றியை பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள எங்களது கூட்டணி மிகுந்த ஒற்றுமை உடன் கொள்கை உணர்வோடு இடைத் தேர்தலை எதிர்கொள்கிறது.

எனினும் எதிர்க் கட்சியில் இந்த நேரம் வரை மாபெரும் குழப்பம் நிலவுகிறது. பல உலக நாடுகளிலுள்ள குழப்பத்தை விட அங்கு பெரிய குழப்பமாக இருக்கிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணர் தேரை ஓட்டி வெற்றியை கொடுத்ததைப் போல ஸ்டாலின் ஈரோடு தேர்தலில் வெற்றியை பெற்றுக்கொடுப்பார் என்று அவர் கூறினார்.