தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமானவர் நானி. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானி ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் தசரா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள தசரா திரைப்படம் மார்ச் மாதம் 30-ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் உகாதி பண்டிகையை முன்னிட்டு மும்பையில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் நானி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராணாவும் கலந்து கொண்டார். ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது  நடிகர் நானி மற்றும் நடிகர் ராணா சரக்கு பாட்டிலை எடுத்து கல்பாக அடித்தனர்.

இது போன்ற ஒரு காட்சி தசரா படத்திலும் இடம்பெற்றிருக்கும். அதன் பிறகு நானி  மற்றும் ராணாவுக்கு போட்டியாக கீர்த்தி சுரேஷ் சரக்கு பாட்டிலை எடுத்து அவர்களை போன்றே கல்பாக அடித்தார். இதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாக்கினார். ஆனால் அதன் பிறகு தான் தெரியவந்தது பாட்டிலில் இருந்தது மது இல்லை. அது வெறும் ஜூஸ் தான் என்று. அந்த ஜூஸை கீர்த்தி சுரேஷ் அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தார். மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.