இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இப்போது தென்னிந்திய நடிகை ஒருவர் மீது கிரஷ் கொண்டு உள்ளார் என்பதை அவரே அண்மையில் நடந்த ஒரு நேர்காணலில் தெரிவித்து உள்ளார். முன்னதாக சுப்மன் கில், சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுடன் காதல் என வதந்திகள் பரவி வந்தது. இதையடுத்து அதை சச்சின் எதிர்த்ததாகவும் வதந்திகள் பரவியது.

அதன்பின் சுப்மன் கில் பாலிவுட் நடிகை சாரா அலிகானுடன் டேட்டிங் செய்து வருவதாக வதந்தி பரவியது. எனினும் அதை முற்றிலும் மறுத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதை தெரிவித்தனர்.  அண்மையில் சுப்மன் கில்லிடம் ஊடகம் ஒன்று நேர்காணல் நடத்தியது. அப்போது அவரிடம் உங்களின் அபிமான நடிகை யாரென கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ராஷ்மிகா மந்தனா என பதிலளித்து உள்ளார். அதுமட்டுமின்றி அவர் மீது தனக்கு கிரஷ் உள்ளதாகவும் சுப்மன் தெரிவித்து உள்ளார். அதன்பின் இதற்கு ராஷ்மிகா என்ன பதில் கூற போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அதனை தொடர்ந்து காட்டுத்தீ போல பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அடிப்படையில் சுப்மன் கில் நேர்காணலில் கூறப்பட்டதாக பரவி வந்த போஸ்டுக்கு கீழ் “எந்த ஊடகத்திற்கு நான் இப்படி பதிலளித்தேன் என்பது எனக்கே தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இதனால் காட்டுத் தீ போன்று வேகமாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.