டிக்டாக் வாயிலாக பிரபலமானவர் தான் இலக்கியா. டிக்டாக்கில் இரட்டை அர்த்த வசனங்களில் வெளியிட்ட வீடியோ வாயிலாக பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார் இலக்கியா. சமீபத்தில் சமூகவலைத்தளம் ஒன்றில் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இலக்கியா. அப்போது இலக்கியா தான் 3-ம் வகுப்பு பயிலும் போது தன் அம்மா இறந்ததாகவும், பிறகு அப்பா 2-வது திருமணம் செய்துக்கொண்டதால் என் வாழ்க்கை மாறியதாகவும் தெரிவித்தார்.

அதோடு அம்மா இருந்திருந்தால் என் வாழ்க்கை வேறமாதிரி இருந்திருக்கும் என கூறினார் டிக்டாக் இலக்கியா. இந்த நிலையில் டிக்டாக் இலக்கியாவின் மார்பகங்கள் பற்றி ஷகீலா கேள்வி எழுப்பினார். அதாவது, உடல் வாகுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை, அறுவை சிகிச்சை செய்து கொண்டாயா..? (அ) ஊசி எதுவும் செலுத்திக்கொண்டாயா என பச்சையாக கேட்டு இலக்கியாவை நெளிய வைத்தார். அதற்கு பதிலளித்த இலக்கியா, எங்கள் குடும்ப ஜீன் அப்படி. எங்களது வீட்டில் பெண்கள் அனைவரும் இப்படிதான் இருப்போம் என பதிலளித்தார். அதோடு இதற்காக செலவு செய்யவேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.