அறிமுக டைரக்டர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. இந்த படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா போன்றோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். அதோடு மும்பை மாடல் காயத்திரி ஐயர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராட்சசன் வினோத் சாகர், அருள் டி.சங்கர், கோடாங்கி வடிவேல், இ.ராம்தாஸ் போன்றோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

சர்வைவல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் அண்மையில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், தனபாலன் அண்ணா, ரஞ்சித் அண்ணா நான் எல்லாம் ஒன்றாக வேலை பார்த்ததாக சொன்னார்கள். ஆனால் அவர் உதவி இயக்குனராக இருந்தபோது நான் ஆபீஸ் பாயாக பணிபுரிந்தேன் என உருக்கமான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.