தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக இருப்பவர் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. இவருக்கு இன்று போக்குவரத்து போலீசார் 2500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதாவது காரில் பம்பர் பொருத்தி, கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியது போன்ற போக்குவரத்து விதிமுறை குற்றங்களுக்காக திண்டுக்கல் லியோனிக்கு 2500 ரூபாயை போக்குவரத்து போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.