தமிழ்நாடு முழுவதும் OPS ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த 19-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், பிரபாகரன், பெங்களூர் புகழேந்தி உள்ளிட்ட ஓபிஎஸ் அணியின் முக்கியமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் வெளியில் வந்த பெங்களூர் புகழேந்தியை, எடப்பாடி பகுதியை சேர்ந்த அதிமுகவினர் சில பேர் சூழ்ந்துகொண்டு அவரை அவதூறாக பேசுவதோடு தாக்க தொடங்கினர். காரின் உள்ளே அமர்ந்தபடி இதை கவனித்த புகழேந்தி ஜன்னலை திறக்கவில்லை. இதன் காரணமாக கோபமடைந்த அவர்கள் கார் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர். அதற்குள் சமாளித்துக்கொண்ட கார் ஓட்டுநர் வேகமாக காரை இயக்கியதால் புகழேந்தி தாக்குதலில் இருந்து தப்பினார்.