காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை திட்டத்தை பின்பற்றி நாளை முழுமையாக செயல்பட வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதேபோன்று சென்னையிலும் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சென்னையில் மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடு செய்யும் இடமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் முழு நேர வேலை நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.