ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள ரயில் நிலையத்தில் தூய்மை பணியாளர் ஒருவரை முகமது சையது அகமது கத்தியால் தாக்கியதோடு தங்களையும் தாக்க முயற்சி செய்ததால் அவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.