நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நாளை நடைபெற உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னை காரணமாக மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று, நாளை (மே 7) நடைபெற இருந்த நீட் தேர்வை ஒத்திவைத்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதிய தேர்வு தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் மற்ற மாநிலங்களில் திட்டமிட்டபடி நாளை தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.