ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது.

ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது. சம்பாய் சோரன் அரசுக்கு ஆதரவாக 47 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். பெரும்பான்மைக்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 47 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றது.

அமலாக்க துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில், சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்றார். ஜார்கண்டில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா அரசு வெற்றி பெற்றது.