செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உறுதியாக அமமுக-வினுடைய பொது செயலாளர்  டி.டி தினகரனோடு  நின்று நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் பணி செய்வோம். தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பத்திரிக்கை செய்தி உங்களை கூப்பிட்டு தான் முதல்ல சொல்லுவோம். அமமுக, பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு சூழல் இருக்கு. நல்ல சூழல் இருக்கு. இணைந்து பணியாற்றுவதற்கு நல்ல சூழல் இருக்குது.‍

இந்த செகண்ட் இந்த நிமிஷம் வரைக்கும் பாஜகவுடன் தொடர்பில்  இருக்கின்றோம். அகில இந்திய அளவில் பாஜகவுடன் தொடர்பில் இருக்கின்றோம். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால் சிறுபான்மையினர் ஓட்டு எங்களுக்கு தான் என எடப்பாடி பழனிச்சாமி சொல்வது  சுத்த பொய். அவங்க மேல மக்களுக்கு கடுமையான வெறுப்பு இருக்கு.

தலைவர் வகுத்து தந்த விதியை  மாற்றுவதற்கு இடமில்லை என்று அவரே சட்டவிதியை வகுத்து தந்த போது….. ஒரு இறுதியான முடிவை அவரே வச்சிருக்காரு. அதபோய் மாற்றுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரம் கிடையாது. 50 வருஷம் இந்த இரு பெரும் தலைவருக்கு தெரியாததா  அவருக்கு தெரிஞ்சிருச்சு என தெரிவித்தார் .