கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி திடீர் குப்பம் பகுதியில் ரவிக்குமார்(68) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களான மீரா(58), அபினேஷ் (10) நந்தினி(40) ஆகியோருடன் ஒரு காரில் நெய்வேலியில் இருந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பாளையம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விருதாச்சலம்- ஆண்டிமடம் தேசிய நெடுஞ்சாலையில் ராங்கியம் கிராமம் அருகே வந்தபோது ரவிக்குமார் டீசல் போடுவதற்காக பெட்ரோல் விற்பனை நிலையத்திற்குள் திரும்பியுள்ளார்.

அப்போது எதிரே வந்த மற்றொரு கார் ரவிக்குமாரின் கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ரவிக்குமார், மீரா, நந்தினி, அபினேஷ், மற்றொரு காரில் வந்த மணிகண்டன், ரவிக்குமார்(48) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.