ஐபிஎல் 2024க்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் தக்கவைத்துள்ள அனைத்து வீரர்களின் பட்டியல்..

ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்ட்டுள்ள வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்திற்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ள, தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழுமையான பட்டியலை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

ஷிகர் தவான் (கேப்டன்), மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங் (வி.கீ), ஜிதேஷ் சர்மா (வி.கீ), சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா தைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், சாம் கர்ரன், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் :

மோஹித் ரதீ, ராஜ் பாவா, ஷாருக் கான், பானுகா ராஜபக்சே, பல்தேஜ் சிங்.