மழையால் ஐபிஎல் இறுதி போட்டி ரத்தானால் நாளை இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 2023 ஐபிஎல் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மைதான ஊழியர்கள் மைதானத்தை  மூடி வைத்துள்ளனர். இந்த மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முக்கியமான இறுதிப்போட்டி நடைபெறும் நேரத்தில் மழை கொட்டி தீர்த்து வருவதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஐபிஎல் இறுதிப்போட்டியை நடத்த இரவு 9:30 மணி வரை  நடத்த கட் -ஆப் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்று போட்டி ரத்து செய்யப்பட்டால் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.