ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டேவிட் வார்னர் 31 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார்.

அதன்பிறகு ப்ரித்திவி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும், கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ 37 பந்துகளில் 82 ரன்களும், பில் சால்ட் 26 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வி தழுவியது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக டிஎம் லியம் லிவிங்ஸ்டன் 48 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். மேலும் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றி பெற்றது.