இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தற்போது டெல்லி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார். இவருக்கு இதுவரை ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது.

இதன் காரணமாக இனி மேற்கு வங்காள அரசு சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளது. இந்த இசட் பிரிவு பாதுகாப்பின் படி இனி சவுரவ் கங்குலிக்கு 8 முதல் 10 போலீசார் பாதுகாப்பு கொடுப்பார்கள். மேலும் வருகின்ற 21-ம் தேதி கங்குலி கொல்கத்தாவுக்கு வருகை புரியும் நிலையில் அதற்குப் பிறகு அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட இருக்கிறது.