ஐபிஎல் 16 வது லீக் தொடரில் பிளே ஆப் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் பிளே ஆப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.

முதல் இரண்டு போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஐபிஎல் டிக்கெட்டில் தொடர்ந்து மோசடி செய்து வரும் நிலையில் தற்போது இந்த ஆன்லைன் டிக்கெட் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒன்பது போட்டிகளுக்கும் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.