16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. லீக் சுற்று முடிவில் டாப் நான்கு இடங்கள் பிடித்த அணிகள் குஜராத் டைட்டன்ஸ், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில் IPL 2023ன் இறுதிப் போட்டி, மழை காரணமாக இன்று ரிசர்வ் நாளில் நடைபெறகிறது. இன்று போட்டியை காண, கையில் டிக்கெட் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், மழையில் நனைந்த டிக்கெட் கிழிந்து இருந்தாலும், பரவாயில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. டிக்கெட் எப்படி இருந்தால் அனுமதிக்கப்படும் என்று மேலே புகைப்படம் உள்ளது.