பாஜக கட்சியின் நிர்வாகி எஸ்வி சேகர் சில காலமாக அண்ணாமலையை விமர்சித்து வரும் நிலையில் அவர் பிராமணர்களுக்கு எதிரி என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்‌‌. இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்‌. அதற்கு அவர் எஸ்வி சேகர் டெல்லிக்கு போகட்டும். என்னைப் பற்றி மேலிடத்தில் எந்த புகார் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் செல்வதற்கு 6000 ரூபாய் தான் கட்டணம்.

யார் வேண்டுமானாலும் என்னை பற்றி புகார் கொடுக்க டெல்லிக்கு செல்லட்டும். எனக்கு கொஞ்சம் திமிரு ஜாஸ்தி தான். நான் தலைவரா இருந்தாலும் அப்படித்தான் இருப்பேன். ஊருக்கு போய் மாடு பிடிச்சாலும் இப்படித்தான் இருப்பேன். அண்ணாமலை தலைவர் ஆன பிறகு மாறிடனும் பார்த்து நடந்துக்கணும்னு சொன்னா என்னிடம் நடக்காது. நான் தொண்டர்களுக்காக இருக்கக்கூடிய தலைவன். நான் தலைவராக இருந்தாலும் இல்லாவிடிலும் இப்படித்தான் இருப்பேன். மேலும் என்னுடைய ஒரே நோக்கம் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மட்டும் தான் என்று கூறினார்‌