தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரும் 9ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மாணவர் சேர்க்கை, இல்லம் தேடி கல்வி, சிறப்பு வகுப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.