டெல்லியில் உள்ள மண்டோ சிறையில் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் இருக்கிறார். பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை காதலித்தார். நடிகை ஜாக்குலினுக்கு அவர் பல விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்துள்ளார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நடிகை ஜாக்குலின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். நீயும் என்னை மிஸ் பண்ணுகிறாய் என்பதை நான் அறிவேன்.

இதை நீ ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். என் வாழ்வில் நீயும் உன் அன்பும் எனக்கு கிடைத்த விலைமதிப்பில்லா பொக்கிஷங்கள். நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நீயும் அறிவாய். என்னுடைய பிறந்தநாளில் எனக்கு பல்வேறு வாழ்த்து கடிதங்களும் ஆசீர்வாதங்களும் கிடைத்துள்ளது. என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என்று கூறி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.