தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சிம்பு பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது விக்ரம் படத்தில் எப்படி இயக்குனர் அனைத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாரோ அதேபோன்று பத்து தல திரைப்படத்திலும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இயக்குனர் கிருஷ்ணா முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். அதன் பிறகு பத்து தல திரைப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக அமையும் என்றும் சிம்பு கூறியுள்ளார். மேலும் நடிகர் சிம்பு சொன்ன இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்க விருப்பப்படுகிறா என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.