
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, என்கிட்ட பேசுனவுங்க இடைத்தரகர்கள்… நான் அவுங்க கிட்ட காது கொடுத்து என்ன விஷயம் ? யாரென்று நான் கேட்க மாட்டேன்…. மூணு மாசமா தொடர்ந்து சில பேர் பேசுங்க… அதை தான் நான் சொல்றேன் இல்ல…. முதல்ல இணக்கமா… வேண்டியவுங்க மாதிரி…
முக்கிய இடத்தில் இருந்து தகவல் வந்திருக்கு…. நீங்க கொஞ்சம் கவனமா இருங்கறது…. பிறகு கொஞ்சம் என் பக்கத்துல இருந்துட்டு சார்ந்து பேசுற மாதிரி பேசுறது.... இதை நம்புறவுங்க அப்படியே ஏமாத்துறது. இதுதான் நாடு முழுவதும் நடக்கு…
தமிழ்நாட்டில் நம்முடைய மாண்புமிகு முதல்வரின் ஆட்சியில், நம்முடைய காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதால்…. லஞ்ச ஒழிப்புத்துறை சரியா செயல்படுத்து…. இதுல வேணும்னு பண்ணாங்கன்னு யாரும் சொல்ல முடியாது….. கையும் களவுமாக அவங்கள பிடிச்சு இருக்காங்க…
நடவடிக்கை விசாரணை நடந்துட்டு இருக்கு…நான் சொல்றேன் இப்படி இடைத்தரகர்களை வைத்து பண்ணிட்டு இருக்காங்க…. என்கிட்டயும் வந்தாங்க நான் ஒரே வரியில் நோ போனு சொல்லிட்டேன். அவங்க கிட்ட இது யாரு ? என்ன…. வாங்க… நாம போவோம்ன்னு சொல்ல…
மத்திய அரசு உங்களை ஏதாவது பிரச்சனை பண்ண சொல்லி இருக்கு அப்படின்னு சொன்னாங்க. நீங்க முடிந்தால் கொஞ்ச நாள் ஊரை விட்டு போயிருங்க… உங்க செல் நம்பரை மாத்திருங்க… இப்படி எல்லாம் சொன்னாங்க… தம்பி நான் ஆரம்ப காலத்தில் இந்த நம்பர்ல தான் இருக்கு…. நான் செல் நம்பரை மாற்ற போவதில்லை… நான் பேசறது இல்ல.. நல்லதோ கெட்டதோ என்ன இருந்தாலும் நீயே எடுத்துக்கோ என தெரிவித்தார்.