தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் விஜயகாந்த் குறித்த போலி செய்திகள் தினந்தோறும் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறன.

இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பேசி உள்ள பிரேமலதா, விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வருகிறது, ஏன் வதந்திகளை தொடர்ந்து பரப்புகிறீர்கள். அவரைப் பற்றி தவறான செய்தியை போடுவதற்கு முன்னால் எங்களிடம் ஒரு வார்த்தை கேளுங்கள். அவர் நலமாக உள்ளார். இரண்டு மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்து விடுவார். அதை அறிவித்துவிட்டு தான் நாங்கள் வீட்டிற்கு செல்வோம் என பிரேமலதா கூறியுள்ளார்.