NCWவில் எத்தனை பேர் கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்களோ,  அதை பொறுத்து நடவடிக்கை எடுப்போம். NCWஇல் கம்ப்ளைன்ட் கொடுப்பது பாஜக ஆளும் மாநிலத்திற்கும்,  பாஜக ஆளாத மாநிலத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ,

குஷ்பூ  மேல தொங்கிட்டு போனா நமக்கும் நாலு பேர் பேட்டி எடுப்பீங்க அப்படின்னு பிரபலங்களை வாங்கி கொடுக்கறோம் இல்ல 36 வருஷம் கழிச்சு அந்த இடத்தில் நான் இருக்கேன் பாருங்க அதுல எனக்கு சந்தோசமா இருக்கு என்ன பேசி இருக்கேன் என எனக்கு தெரியும் அதனால அது அப்படியே இருக்குது.

தமிழ்நாட்டுல 450 தலித்துகள் மேல அட்டூழியம் நடந்திருக்கு.   எஸ்சி/ எஸ்டி கமிஷன்ல ஃபுல்லா டீடைல் இருக்கு. போன வருஷம் நவம்பர் வரையிலிருந்து இந்த வருஷம் நம்பர் வரைக்கும் இருக்கு. 450 கேஸ்  தமிழ்நாட்டில் மட்டும். எத்தனை பேருக்கு உங்களோட விசிக இல்ல,  காங்கிரஸ்காரங்க குரல் கொடுத்திருக்காங்க.

ஒரு பகுதியில தலித் மக்கள் வாழுற பகுதியில் குடிக்கிற தண்ணில மலம் கலந்து விட்டார்கள்.   போய் போராட்டம் பண்ணாங்களா ? சிஎம் வீட்டு வாசலில் போராட்டம் பண்ணாங்களா ? இந்த விஷயம் என்ன ஆட்சி ? என் இன்னும் இந்த விஷயத்தை முடிக்கவில்லை என  சிஎம் கிட்ட இதுவரைக்கும் கேள்வி கேட்டாங்களா ?  அதுக்கு மட்டும் கேள்வி கேட்க வக்கில்லை. குஷ்பு வீட்டு வாசல்ல வந்து நிப்பாங்களா? என்ன பாத்தா எப்படி தெரியுது எல்லாருக்கும் என ஆவேசமானார்.