RSS அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காததால் ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். மனு வெள்ளியன்று விசாரணைக்கு வருகின்றது என தமிழக போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும்,  அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காதது அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிக்காட்டுகிறது என கூறிய சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், DGP நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.