ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் பேருந்து நிலையம் முன்பு இருக்கும் மின்சார கம்பத்தில் இருந்து எதிரே இருக்கும் மளிகை கடைக்கு செல்லும் ஒயர் திடீரென அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

மேலும் சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் ஒயரை அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.