அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்க்குடி காலனி தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகள் அபிநயா 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த 15-ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அபிநயா மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அபிநயாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.