கரூர் மாவட்டத்தில் உள்ள காலியாளப்பட்டி தரகம்பட்டி சிந்தாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை ரெக்கை மற்றும் அடாப்டர் பெரிய டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. நேற்று நள்ளிரவு காற்றாலை அடாப்டர் எடுத்துக்கொண்டு ஒரு டாரஸ் லாரி வந்தது.

இந்நிலையில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாயனூர் முடக்கு சாலை பகுதியில் திரும்ப முயன்ற போது லாரி நடுவழியில் தரையில் இடித்து சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.