நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, சாட்டிக்கொடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் அளவுக்கு அதிகமான பனி காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சாலையில் பனி சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டுகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களில் சென்றனர். பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.