இந்தியாவில் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனிநபர் கடன்கள் மற்றும் மொபைல் பேக்கிங் போன்ற பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியில் வாடிக்கையாளர்கள் அனுபவத்தை எளிமையாக்குவதற்கும், டிஜிட்டல் மயமாக்கலை வலுப்படுத்துவதற்கும் டிஜிட்டல் முறையில் தனிநபர் கடன் சேவையை தொடங்கியுள்ளது.

இந்த வசதி புனே, பெங்களூரு, கொல்கத்தா, பாட்னா, சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி‌ கிளைகளில் மட்டும் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் முறையில் தனிநபர் கடன் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.