ராஜஸ்தான் மாநிலம் பர்மாரில் 30 வயது பட்டியல் இனப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நெருப்பு வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷாக்குர்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் பக்கத்து வீட்டில் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளின் தாயான பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளம் பெண்ணை அவரின் கணவர் வெளியூர் சென்ற நேரத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

பிறகு அந்தப் பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர். அப்போது அந்த நபர் திடீரென அவர்களை தள்ளிவிட்டு இளம் பெண் மீது அமிலம் போன்ற ரசாயனத்தை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இதனால் அந்த பெண்ணின் உடல் தீப்பிடித்து எரிந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.