சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள சண்முகநகரைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிறந்த மூன்றாவது பெண் குழந்தை, நேற்று இரவு வயிற்றுப்போக்கால் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல மருத்துவ முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், குழந்தை நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து இந்த இந்த மர்ம மரணம் குறித்து அன்னதானப்பட்டி காவல்துறை அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.