சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் வசிக்கும் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக வந்த வாட்ஸ்அப் செய்தியைப் பெற்று மோசடி ஒன்றில் சிக்கியுள்ளார். மறுமுனையில் உள்ள தெரியாத நபர் ஒருவர், தான் கூறும் திட்டத்தின் கீழ்  பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் தருவதாக வாக்குறுதி அளித்து அவரை கவர்ந்தார். இந்த வாய்ப்பை நம்பி பாதிக்கப்பட்டவர் மோசடி நபர் வழங்கிய  வங்கிக் கணக்கில் ஏழு தவணைகளில் மொத்தம் ரூ 6,71,241 செலுத்தியுள்ளார்.

ஆனால்,  கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் படி எந்த  கமிஷனும் ஒருபோதும் வழங்கப்படவில்லை. மேலும் தனிநபரை தொடர்பு கொள்ள முயன்ற போது சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை. இதனால் ஏமாற்றத்தால் விரக்தியடைந்த பாதிக்கப்பட்ட நபர், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார்.  அவர்கள் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.